Tuesday 22 September 2015

என் ஆசை ஜன்னலே



நீ  என்  வீட்டின் ஜன்னல்.
என் மனம் கவர்ந்த தோழமை.
உன் வழியே நான்...
தென்றலை உணர்கிறேன்.
வெளியை தரிசிக்கிறேன்.
வானவில் ரசிக்கவும்
மழை கண்டு குதூகலிக்கவும் செய்கிறேன் !


உன்னருகமர்ந்து தேநீர் பருகவும்,
சமயத்தில் தலை சாயவும் ,
கண்ணயரவும் கூடும் .
நானறிவேன். நன்கு அறிவேன்.
உன்னால் புயல் உணர்த்திடவும்
புழுதிவாரி இறைத்திடவும் முடியுமென்று.
ஆனாலும்.... கதவிட்டு உன்னை அடைத்திடமாட்டேன்.
ஒன்றை நீயுணர்ந்து கொள்.
நீ எப்படியானாலும் என் வீட்டின்
நுழைுவாயிலாகமுடியாது. ஏனெனில்
உனக்கு கம்பிகள் இருக்கின்றன.

No comments:

Post a Comment