Thursday 8 October 2015

மழை


ஆறு குளம் ஏரி நிரப்பி
காடு வயல் தோட்டம் காத்து
ஊரெல்லாம் செழிப்பாக்கி
மனமெல்லாம் நிறைவாக்கி
மகிழ்வினை நீ தந்திடிலோ
கூத்திடுவோம் வான்மழையே !
மாறாக பேயாட்டம் நீயாடி
ஓலமிட்டு நீயழுது நாசமதை தந்திடிலோ
நீயும் இயற்கையின் ஓர் பிழையே !

No comments:

Post a Comment