Thursday 8 October 2015

கூடிழந்த சிட்டுக்குருவிகள்

ஓலக்குடிசையில உங்க வாழ்க்கை. அதன் விட்டத்துல ஒதுங்கியேதான் எங்க.வாழ்க்கை
 நெல்லு.கம்பு சோளமுன்னு  நெலத்துல விதைச்சிங்க சிந்துனத தின்னுதான் சிறப்பா திரிஞ்சொங்க.
தெருவோரமெல்லாம் மரத்த வளர்த்திங்க
அதுல ஓடி விளையாடி பூரிசோம்க
மரத்தடியில உங்க காதல் வாழ்க்கை
மரத்துமேலதான் நாங்களும் காதலிச்சோங்க.
இப்படி ஒன்னுமண்ணா திரிஞ்ச நமக்குள்ள,
இன்னிக்கு ஏகப்பட்ட இடைவெளிங்க
ஆறறிவு படைச்ச நீங்க செஞ்சுட்டிங்க
புரட்ச்சியெல்லாம் கண்டுட்டிங்க வளர்சசியதான்.
 ஆனா அஞ்சறிவு எங்களுக்கு எதுவும் புரியலிங்க.
காசு பணம் பங்களான்னு மாறிடுச்சு உங்க வாழ்க்கை.
காடு மேடு கழனியின்னு நாங்க பாட்டு சுத்துனோங்க!
கோபுரமா கட்டிட்டிங்க அலைபேசியதில் அளவளாவ!
காந்த சக்தியத தாங்க முடியலிங்க எங்களால!
மரத்தையெல்லாம் வெட்டிட்டிங்க
தானிய மூட்டையெல்லாம் நெகிழிப்பை ஆக்கிட்டிங்க.
விவசாய நெலமெல்லாம் வீட்டுமனைகளாக்கிட்டிங்க
இயற்கையோட படைப்பு முழுசும் உங்களுக்கு மட்டுமாங்க?
உங்களோட சுகதுக்கத்தையெல்லாம்
எங்ககிட்ட சொன்னீங்க.
பாட்டெல்லாம் படிச்சிங்க.
ஆனா, இன்னிக்கி அரையடிக்கு ஒரு பெட்டியும் கைப்பிடி தானியமும் வேண்டுறோங்க உங்ககிட்ட
செவிமடுத்து கேளுங்க! எங்க குறைய
தீர்த்திடுங்க !
உங்களை வாழ்த்துறோங்க !

No comments:

Post a Comment